உயிரோசை இதழில் வெளியான எனது "காத்திருத்தல்" மற்றும் "எச்சங்கள்" கவிதையை வாசிக்க...
காத்திருத்தல்
வீட்டுக்கு மாடியில்
அத்துவானக் காட்டில்
காக்கைகள் பறந்தன.
“காக்கைகள் கரைந்தால்
விருந்தாளிகள் வரக்கூடும்”
செத்துப்போன அப்பா
சொன்னது.
செத்துப்போன மாமா
சொன்னது.
செத்துப்போன அக்கா
சொன்னது.
செத்துப்போன எல்லோரும்
சொன்னது.
காக்கைகள்…விருந்தாளிகள்
விருந்தாளிகள்…காக்கைகள்
காக்கைகள்…விருந்தாளிகள்
விருந்தாளிகள்…காக்கைகள்
மற்றும் சற்றுமுன்
இறந்துப்போன நான்.
எச்சங்கள்
அடுக்குமாடிக் குடியிருப்பின்
வெட்டுப்பட்ட மரத்தடியில்
இறைந்து கிடக்கின்றன.
பறவைக் கூடுகளின்
எச்சங்கள்.
வாழ்ந்து கெட்ட
வீட்டின்
ஏலம் வந்த பொருட்களின்
மிச்சங்களாக..
நன்றி...!
-என்.விநாயக முருகன்
No comments:
Post a Comment