Friday, October 29, 2010

ஆற்றுப்படை

மருத்துவக் காப்பீடு விற்கும்
நண்பரை சந்திக்க நேரிட்டது
உடல்நலனை விசாரித்தார்
உள்ளம் நெகிழ

என் நெஞ்சுவலிப் பற்றி கேட்டார்
மிகுந்த அக்கைறையோடு
சுவரிருந்தால் சித்திரமென்றார்

மூட்டுவலிப் பற்றி விசாரித்தார்
கனிவாய் தாயன்போடு
உடல் வளர்த்தால்
உயிர் வளருமென்றார்

பு‌திதாக வந்திருந்த
காப்பீட்டுத் திட்டத்தை
பரிவாக விவரித்தார்

பத்து வகை நோய்களுக்கு
பணம் தருவதாக நம்பிக்கையளித்தார்
சுலபத்தவணை வசதியென்றார்
குறைந்தப்பணமே ஆகுமென்றார்

இறந்துப்போனா‌‌‌ல்
பணம் கட்ட தேவையில்லையென்றார்
ஆறுதலாக இருந்தது





நன்றி
என்.விநாயக முருகன்

5 comments:

  1. ஆறுதலாக இருக்கு.. :)

    ReplyDelete
  2. நன்றி சரவணகுமார்
    நன்றி அசோக் :)
    நன்றி மோகன்

    ReplyDelete
  3. ஹா..ஹா.. என்ன சொல்வது... மிகவும் பிடித்திருக்கிறது.. நல்ல கவிதைங்க...

    ReplyDelete