திண்ணை.காமில் வெளியான எனது "நீங்கள் கேட்டவை" என்ற கவிதை வாசிக்க....
உயிரோசையில் இந்த கவிதையை வாசிக்கலாம்.
நீங்கள் கேட்டவை
----------------
கடற்கரைக்கு வந்திருந்த
புதுமண தம்பதிகளிடம்
தொலைக்காட்சி தொகுப்பாளினி
பிடித்தமானவற்றை கேட்டுக்கொண்டிருந்தாள்.
கடைசியாக பார்த்த படம் கேட்டாள்.
கணவருக்கு பிடித்த பாடல் கேட்டாள்.
மனைவிக்கு பிடித்த பாடல் கேட்டாள்.
கணவரிடம் பிடித்த நடிகையை கேட்டாள்.
மனைவியிடம் பிடித்த நடிகரை கேட்டாள்.
கணவருக்கும் , மனைவிக்கும்
ஒருவரையொருவர் பிடித்திருக்கிறதாவென்று
கேட்கவேயில்லை இறுதிவரைக்கும்.
-நன்றி
என்.விநாயக முருகன்
கேட்டுயிருந்தாலும் உண்மைய யாரும் பப்ளிக்கா சொல்ல மாட்டங்கப்பா...
ReplyDeleteநல்லா கேக்குராங்கையா கேள்வி
ReplyDeleteஅப்படிநீன்னு கேட்க தோனுதுல்ல ??
நன்றி அசோக்
ReplyDeleteநன்றி பாலா
:-))).
ReplyDeleteநன்றி ராஜாராம்
ReplyDelete