ஷேக்ஸ்பியரோடு பயணம்
------------------------
நேற்று வளசரவாக்கத்தில்
ஷேக்ஸ்பியரோடு பயணம் செய்தேன்.
17-M பேருந்தில் ஏறி
கலைஞர் கருணாநிதி நகருக்கு
டிக்கட் கேட்டவரை
கே.கே நகரென்று திருத்தினார்.
நான் இறங்கும் இடம்
எம்.கே.பி நகர் பக்கத்திலென்று சொன்னார்.
(மகாகவி பாரதியென்று பிற்பாடுதான் தெரிந்தது)
தி.நகரில் தனக்கு
தெரியாத கடைகளே
இல்லையென்று சொன்னார்
டி.டி.கே சாலையின்
மேம்பாலம் பற்றி பேச்சு வந்தது.
பெயரை சுருக்கும்
பண்பாடு பற்றி சீண்டிவிட்டேன்.
ரோஜாவை எப்படி அழைத்தாலென்ன
கோபமாய் கேட்டவர் விடைபெற்றார்.
ஆர்.ஏ.புரத்தில் இறங்கியவரின்
முழுப்பெயரும் நினைவில் இல்லை.
(ஷேக்கென்ற பெயரும் நான் வைத்ததே)
-:) பிடிச்சிருக்கு நண்பா
ReplyDeleteKalakkittenga:)
ReplyDelete//ரோஜாவை எப்படி அழைத்தாலென்ன //
ReplyDeleteகரெக்ட்
ஆஹா...!
ReplyDelete//ஷேக் என்ற பெயரும் நான் வைத்ததே//
ReplyDeleteநல்ல சுருக்கம் எம்.வி.மு!
நன்றி மண்குதிரை
ReplyDeleteநன்றி அசோக்
நன்றி கேயார்
நன்றி ராஜா
நன்றி மாதவராஜ்
நன்றி நாணல்