தற்கொலை கவிதைகள்
----------------------
தற்கொலை கவிதைகள் எழுதும்
ஊரின் பிரபல கவிஞரை
நேற்று சந்திக்க நேரிட்டது
தற்கொலை செய்துக்கொள்வதில்
இவ்வளவு தகவல்களை
இவர் போல யாரும்
கவிதையில் சொல்லிவிட முடியாது
தற்கொலை செய்துகொள்பவன்
இறுதிக்கணங்களை
அருகிலிருந்து பார்த்தது போல
அப்படியே எழுதுவார்
இறுதிவரிகளை படித்தால்
நாக்கு தள்ளும்
நெஞ்சு பதறும்
கால்கள் மரக்கும்
அவ்வளவும் சத்தியம்
நானும் கவிஞரும்
பொதுவாய் சில விஷயங்களை பேசினோம்
விடைபெறுகையில்தான் தெரிந்தது
அவர் ஒருமுறை கூட
தற்கொலை செய்துக்கொண்டது இல்லையாம்
கவிதைக்கு இன்ஸ்பிரேஷன்: -
நிலாரசிகன்
அவர் ஒருமுறை கூட
ReplyDeleteதற்கொலை செய்துக்கொண்டது இல்லையாம்
///
அட! அசத்திவிட்டீர்கள்!!
:-)))
ReplyDelete:) :)
ReplyDeleteரொம்ப நல்ல இருக்கு வாழ்த்துக்கள்....
ReplyDeleteஅட! அசத்திவிட்டீர்கள்
ReplyDelete:-)
ReplyDeleteநன்றி தேவன்
ReplyDeleteநன்றி அசோக்
நன்றி ராஜாராம்
நன்றி சுந்தர்
நன்றி கமலேஷ்
நன்றி குமார்
நன்றி உழவன்