Monday, November 14, 2011

குழப்பம்

கரையில் அலைவதில்
எந்த அலையில்
கால நனைப்பதென்று குழப்பம்

இதிலென்ன யோசனை
எந்த அலை
முன்னால் வருகிறதோ
அதில் நனைப்பதுதானே
என்றொரு குரல் கேட்டது

முந்தி வந்த அலையில்
கொஞ்சம் கால்
நனைத்து திரும்புகையில்
அதற்கு பிந்தி வந்த
அலைகளும் கெஞ்ச ஆரம்பித்தன

இப்போது
எந்த அலையில்
கால் நனைத்தோமென்று குழப்பம்


நன்றி
என்.விநாயக முருகன்

3 comments:

  1. //முந்தி வந்த அலையில்
    கொஞ்சம் கால்
    நனைத்து திரும்புகையில்
    அதற்கு பிந்தி வந்த
    அலைகளும் கெஞ்ச ஆரம்பித்தன

    //
    அழகான வரிகள்

    ReplyDelete
  2. ஒரு வழியா உங்களோட வலைப்பூவ கண்டுபிடிச்சிட்டேன். சேனல் ஒன்'ல உங்க blog எல்லாத்தையும் படிச்சிட்டு எதாவது ஒரு நல்ல பின்னூட்டம் கொடுக்கணும்னு நினைத்து இதுவரைக்கும் ஒரு பின்னூட்டம் கூட போடல. எல்லாவற்றையும் படித்து ரசித்த பின், என் மனதிற்குள்ளாக வியந்து அப்படியே தங்களின் பழைய போஸ்ட் எல்லாத்தையும் படிக்க ஆரம்பிச்சுடுவேன். இதுக்கு மேலயும் தாமதிக்க விரும்பல.
    உங்களோட எழுத்துக்கள் அனைத்தும் அருமை. தொடர்ந்து எழுதுங்க. சேனல் ஒன் மற்றும் இந்த வலைப்பூவை ஆவலுடன் எதிர்நோக்கும் உங்கள் எழுத்துக்கள்ளால் ஈர்க்கப்பட்டு எழுத ஆரம்பித்திருக்கும் எவனோ ஒருவன்.
    -சாரதி.

    ReplyDelete