பிடித்த 10 பிடிக்காத 10
நண்பர் அசோக் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்.
இன்னைக்கு பிடிக்கறவங்க நாளைக்கு பிடிக்காமல் போகலாம். இன்னைக்கு பிடிக்காதவங்களை நாளைக்கு பிடித்து போகலாம். மாறுவது மனம் என்ற சப்டைட்டிலுடன் செல்வதால் இங்கு பிடிக்காதவர் பட்டியலில் வரும் நண்பர்கள் கோவிச்சுக்க வேண்டாம்
1.நடிகை
பிடித்தவர் : வேற யாரு? நமீதா :)
பிடிக்காதவர்: வேற யாரு? அம்மா வேஷத்துல நடிக்கற நடிகைகள் அனைவரும்
2.அரசியல்வாதி
பிடித்தவர் : தமிழருவி மணியன் (யாருப்பா இவரு? நீங்கள் கேட்பது காதில் விழுகின்றது)
வை.கோ (அய்யோ பாவம்)
பிடிக்காதவர்: அனைவரும்
3. உணவு
பிடித்தவை : நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே நீங்கள் எல்லாம் (உடும்புக்கறி
சாப்பிட்டிருக்கீங்களா? சூப்பரா இருக்கும் )
பிடிக்காதவை: ரசம்
4. இயக்குனர் :
பிடித்தவர் : முன்னாள் பாரதிராஜா
பிடிக்காதவர் : இன்னாள் பாரதிராஜா , பாலசந்தர், ராம நாராயணன்
5. எழுத்தாளர்
பிடித்தவர் : தி.ஜா, தஞ்சை ப்ரகாஷ்,கரிச்சான்குஞ்சு, சாரு,இ.பா(ஊர் பாசம்)
பிடிக்காதவர் : இன்னாள் பாலகுமாரன்
6. இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா, எ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ்,எம்.எஸ்.வி,டி.எஸ்.பி
பிடிக்காதவர் : ம்ம்.. யோசிக்கனும்
7. கவிஞர்கள்
பிடித்தவர் : பாரதி,தேவதச்சன்,நகுலன்,கல்யாண்ஜி,முன்னாள் மனுஷ்ய புத்திரன்,
ஞானக் கூத்தன் ,முகுந்த் நாகராஜன்
பிடிக்காதவர் : பிடிக்காதவர் என்று சொல்ல முடியாது, மனதை அவ்வளவாக
பாதிக்காதவர் வைரமுத்து
8. ஊர்கள்
பிடித்தது : கும்பகோணம் (பிறந்தது), சென்னை (வாழவைப்பது)
பிடிக்காதது: புதுக்கோட்டை (சரியான தூங்குமூஞ்சி ஊர்)
9. பதிவர்
பிடித்தவர் : என்.விநாயக முருகன்
(இந்த மூஞ்சிக்கே இந்த மூஞ்சிய பிடிக்கலனா வேற எந்த மூஞ்சிக்கு நம்மள பிடிக்கும்)
பிடிக்காதவர்: அனானிமஸ் பெயரில் பின்னூட்டம்,இடுகை எழுதுபவர்கள்.(ராஸ்கல்ல்ஸ்ஸ்)
10. காமெடியன்
பிடித்தவர் : கவுண்டமணி, வடிவேலு, விவேக், என்.எஸ்.கே
பிடிக்காதவர் : சோ, தங்கபாலு, சு.சுவாமி
நாலு பேரை கூப்பிடனும்..
1. கதிரவன்
2. மண்குதிரை
3. சி.கருணாகரசு
4. நந்தா
5. அனுஜன்யா
Monday, November 30, 2009
Sunday, November 29, 2009
குழப்பம்
ஜ்யோவ்ராமின் குழப்பத்துக்கு ஒரு CounterPart கவிதை
குழப்பம்
—-------
அசோகர் மரம் நட்டார்
குளம் வெட்டினார்
அப்புறம் என்ன ஆச்சு?
ஆறாம் வகுப்பு
சிறுவன் கேட்டான்
மரத்தை வெட்டி
காகிதம் செய்தார்கள்
இப்படி எழுதினார்கள்
அசோகர் மரம் நட்டார்
குளம் வெட்டினார்
குளம் என்ன ஆச்சு?
குழம்பித்தான் போச்சு
குழப்பம்
—-------
அசோகர் மரம் நட்டார்
குளம் வெட்டினார்
அப்புறம் என்ன ஆச்சு?
ஆறாம் வகுப்பு
சிறுவன் கேட்டான்
மரத்தை வெட்டி
காகிதம் செய்தார்கள்
இப்படி எழுதினார்கள்
அசோகர் மரம் நட்டார்
குளம் வெட்டினார்
குளம் என்ன ஆச்சு?
குழம்பித்தான் போச்சு
Saturday, November 28, 2009
தப்பில்லை & இரக்கம்
தப்பில்லை
----------
வெளியில் தெரியாத வரை
கடவுளை கூட புணரலாம்
கனவிலும், கற்பனையிலும்
தப்பில்லை
இரக்கம்
---------
அலுவலகம் முடிந்து
வீடு திரும்பும்போதெல்லாம்
பின்னிரவில் பார்க்க நேரிடுகிறது
பிளாட்பாரத்தில் உறங்கும் குழந்தைகளை
இருப்பதிலேயே அழகான
ஏதாவது குழந்தையை
மனதுக்குள் தத்தெடுத்து
வீடுவரை அழைத்துசெல்கிறேன்
வீட்டினுள் செருப்பை கழட்டியவுடன்
அதையும் துரத்தி விடுகின்றேன்
----------
வெளியில் தெரியாத வரை
கடவுளை கூட புணரலாம்
கனவிலும், கற்பனையிலும்
தப்பில்லை
இரக்கம்
---------
அலுவலகம் முடிந்து
வீடு திரும்பும்போதெல்லாம்
பின்னிரவில் பார்க்க நேரிடுகிறது
பிளாட்பாரத்தில் உறங்கும் குழந்தைகளை
இருப்பதிலேயே அழகான
ஏதாவது குழந்தையை
மனதுக்குள் தத்தெடுத்து
வீடுவரை அழைத்துசெல்கிறேன்
வீட்டினுள் செருப்பை கழட்டியவுடன்
அதையும் துரத்தி விடுகின்றேன்
Friday, November 27, 2009
பசங்க
வலி
—–--
குழந்தைகள் புழங்கும்
வீட்டில்
பொம்மைகள்
நசுங்க நசுங்க
பெருகுகிறது
சந்தோஷத்தின் வலி.
திருஷ்டி பொட்டு
———--------——–
பிறந்த குழந்தையை
பார்க்க வந்தவர்கள்
எவ்வளோ அழகென்று
தூக்கி கொஞ்சிவிட்டு சென்ற
தினம் முதல்
திருஷ்டி பொட்டொன்று மின்னியது.
எவ்வளோ அழகென்று
பொட்டையும் கூடவே
கொஞ்சிச் சென்றார்கள்.
அழகுப்படுத்தியது
———————————
பூந்தோட்டத்தில் பூத்த
வெள்ளைநிற பூக்களுக்கு
மஞ்சள் வண்ணமும்
மஞ்சள் பூக்களுக்கு
நீலநிறமும்
நீலப்பூக்களுக்கு பச்சை வண்ணமும்
தந்து அழகுப்படுத்தியதுப்போல
இருந்தது
மழலையர் பள்ளியின்
மாறுவேட போட்டியொன்றில்.
படைப்புத்தொழில்
————————-
குழந்தை உடைத்து
நொறுக்கிய பொம்மைகள்
கொண்ட மூட்டையை
பரணிலிருந்து திட்டியபடியே
பிரித்தாள் மனைவி
சிதறி தெறித்த
கரடி யானை
சிங்கம் புலி
குரங்கு என்று
வீடெங்கும் காடானது
கரடியின் கால்களோடு
சிங்க உடலை சேர்த்துக்கொண்டு
புலி முகத்தில் ஜீவனொன்று
உலவ ஆரம்பித்தது காட்டினுள்
—–--
குழந்தைகள் புழங்கும்
வீட்டில்
பொம்மைகள்
நசுங்க நசுங்க
பெருகுகிறது
சந்தோஷத்தின் வலி.
திருஷ்டி பொட்டு
———--------——–
பிறந்த குழந்தையை
பார்க்க வந்தவர்கள்
எவ்வளோ அழகென்று
தூக்கி கொஞ்சிவிட்டு சென்ற
தினம் முதல்
திருஷ்டி பொட்டொன்று மின்னியது.
எவ்வளோ அழகென்று
பொட்டையும் கூடவே
கொஞ்சிச் சென்றார்கள்.
அழகுப்படுத்தியது
———————————
பூந்தோட்டத்தில் பூத்த
வெள்ளைநிற பூக்களுக்கு
மஞ்சள் வண்ணமும்
மஞ்சள் பூக்களுக்கு
நீலநிறமும்
நீலப்பூக்களுக்கு பச்சை வண்ணமும்
தந்து அழகுப்படுத்தியதுப்போல
இருந்தது
மழலையர் பள்ளியின்
மாறுவேட போட்டியொன்றில்.
படைப்புத்தொழில்
————————-
குழந்தை உடைத்து
நொறுக்கிய பொம்மைகள்
கொண்ட மூட்டையை
பரணிலிருந்து திட்டியபடியே
பிரித்தாள் மனைவி
சிதறி தெறித்த
கரடி யானை
சிங்கம் புலி
குரங்கு என்று
வீடெங்கும் காடானது
கரடியின் கால்களோடு
சிங்க உடலை சேர்த்துக்கொண்டு
புலி முகத்தில் ஜீவனொன்று
உலவ ஆரம்பித்தது காட்டினுள்
Wednesday, November 25, 2009
எட்டாவது வார்டிலிருந்து
எட்டாவது வார்டிலிருந்து
----------------------
தேங்கிநின்ற மழைநீருக்கு
மனு கொடுக்க சென்றிருந்தேன்
எல்லாம் சரியாகிவிடுமென்றார்
அடுத்த இரண்டுநாட்களில்
வெயில் அடித்து காய்ந்துவிட்டது
வெயிலுக்கு நிழற்குடை நிறுத்தம்
வேண்டி சென்றிருந்தேன்
எல்லாம் சரியாகிவிடும்
சொல்லி முடிக்கவில்லை
மழை கொட்ட ஆரம்பித்தது
மழைநீரில் அறுந்துக்கிடந்த
மின்சார கம்பிக்கு சென்றிருந்தேன்
எல்லாம் சரியாகிவிடுமென்றார்
அடுத்த நாலுநாள் பவர்கட்
கடைசியாக சென்றபொழுதும்
காதுகொடுத்து கேட்டார்
இதுவும் கடந்துப்போகுமென்றார்
எட்டாவது வார்டின் ஜென்குரு
----------------------
தேங்கிநின்ற மழைநீருக்கு
மனு கொடுக்க சென்றிருந்தேன்
எல்லாம் சரியாகிவிடுமென்றார்
அடுத்த இரண்டுநாட்களில்
வெயில் அடித்து காய்ந்துவிட்டது
வெயிலுக்கு நிழற்குடை நிறுத்தம்
வேண்டி சென்றிருந்தேன்
எல்லாம் சரியாகிவிடும்
சொல்லி முடிக்கவில்லை
மழை கொட்ட ஆரம்பித்தது
மழைநீரில் அறுந்துக்கிடந்த
மின்சார கம்பிக்கு சென்றிருந்தேன்
எல்லாம் சரியாகிவிடுமென்றார்
அடுத்த நாலுநாள் பவர்கட்
கடைசியாக சென்றபொழுதும்
காதுகொடுத்து கேட்டார்
இதுவும் கடந்துப்போகுமென்றார்
எட்டாவது வார்டின் ஜென்குரு
Monday, November 23, 2009
சும்மா ஒரு கவிதை
ஜ்யோவ்ராம் சுந்தரின் சும்மா இருத்தல் கவிதை படித்ததும் எனக்கும் சும்மா ஒரு கவிதை எழுத தோன்றியது.சும்மா படித்து பாருங்க
சும்மா ஒரு கவிதை
——————————————————
எப்படி இருக்க?
என்பதை தொடர்ந்து
என்ன செய்கிறாய்?
என்று கேட்டேன்
நீண்டநாட்களுக்கு பிறகு சந்தித்த
நெருங்கிய நண்பனை
சும்மா இருப்பதாக
சொன்னான்
சும்மா எப்படி இருப்பது
எதார்த்தமாக கேட்டேன்
சும்மா இருப்பதின்
சுமைகள் பற்றி
அரைமணிநேரம் பேசினான்.
சும்மா இருந்த சங்கை
ஊதி கெடுத்த ஆண்டியை
பற்றி சொன்னான்
பால்வண்ணம் பிள்ளை
இறுதியில் சொன்ன
சும்மா கெட, சவமே
வரியை மேற்கோள் காட்டினான்
பாடல்பெற்ற தலமொன்றில்
சும்மா இருக்கும் சிவனை பற்றி
ஐந்து நிமிடம் பேசினான்
சற்று வேகமாக
ஊதி கெடுத்த
வருத்தத்துடன் திரும்பினேன்
சும்மா ஒரு கவிதை
——————————————————
எப்படி இருக்க?
என்பதை தொடர்ந்து
என்ன செய்கிறாய்?
என்று கேட்டேன்
நீண்டநாட்களுக்கு பிறகு சந்தித்த
நெருங்கிய நண்பனை
சும்மா இருப்பதாக
சொன்னான்
சும்மா எப்படி இருப்பது
எதார்த்தமாக கேட்டேன்
சும்மா இருப்பதின்
சுமைகள் பற்றி
அரைமணிநேரம் பேசினான்.
சும்மா இருந்த சங்கை
ஊதி கெடுத்த ஆண்டியை
பற்றி சொன்னான்
பால்வண்ணம் பிள்ளை
இறுதியில் சொன்ன
சும்மா கெட, சவமே
வரியை மேற்கோள் காட்டினான்
பாடல்பெற்ற தலமொன்றில்
சும்மா இருக்கும் சிவனை பற்றி
ஐந்து நிமிடம் பேசினான்
சற்று வேகமாக
ஊதி கெடுத்த
வருத்தத்துடன் திரும்பினேன்
Friday, November 20, 2009
இரண்டு கவிதைகள்
திணைமயக்கம்
—————————————
தேநீர் கடையில் நின்றிருந்தவர்
தமிழ் ஆர்வலராம்
கோபத்தோடு கத்தினார்
கலாச்சார கண்றாவி
கசக்கி வீசினார் செய்தித்தாளை
காசிமேடு அருகே
கள்ளக்காதல் எதிரொலியாம்
கணவன் வெட்டி கொலை
மனைவி கைது
திருச்சியை சேர்ந்த
வாலிபருக்கு வலைவீச்சு
செய்தித்தாளை எட்டிப் பார்த்தேன்
அட.…திணைமயக்கம்
குறிஞ்சி நெய்தல்
பெருந்திணை என்று
ஒரு நிமிடம் ஓடியது
—————————————
தேநீர் கடையில் நின்றிருந்தவர்
தமிழ் ஆர்வலராம்
கோபத்தோடு கத்தினார்
கலாச்சார கண்றாவி
கசக்கி வீசினார் செய்தித்தாளை
காசிமேடு அருகே
கள்ளக்காதல் எதிரொலியாம்
கணவன் வெட்டி கொலை
மனைவி கைது
திருச்சியை சேர்ந்த
வாலிபருக்கு வலைவீச்சு
செய்தித்தாளை எட்டிப் பார்த்தேன்
அட.…திணைமயக்கம்
குறிஞ்சி நெய்தல்
பெருந்திணை என்று
ஒரு நிமிடம் ஓடியது
Subscribe to:
Posts (Atom)