கைக்குழந்தைகளோடு பிச்சையெடுக்கிறார்கள்
தங்க நாற்கர சாலைகளில்
வீடு வீடாய் யாசிக்கிறார்கள்
ஓட்டு போட சொல்லி
தொலைக்காட்சியில் பாடும் குழந்தைகள்
தற்கொலை செய்துக்கொள்ள போவதாக
நண்பனிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.
பதில் அனுப்பலாமென்றால்
பேலன்ஸ் இல்லையாம்
செத்தாலும்
செம்மொழியில் முனகிவிட்டு
செத்துத் தொலை
குமரிக்கு அந்தப்பக்கம்தான் கொல்கிறார்கள்
திரும்பி நின்றுக்கொண்டார்
திருவள்ளுவர்
இரண்டு லட்சம் பேர்
குருதியில் நனைந்தமொழி
எங்கள் மொழி - செம்மொழி
கோயிலுக்கு சென்றேன்
சாமியை காணவில்லை
அவர் சாமியாராக கிளம்பி விட்டாராம்
செத்துவிடலாமென
பூச்சிமருந்தை குடித்தேன்
போலி மருந்தாம்
பிற்பாடுதான் தெரிந்தது
//செத்துவிடலாமென
ReplyDeleteபூச்சிமருந்தை குடித்தேன்
போலி மருந்தாம்
பிற்பாடுதான் தெரிந்தது//
அருமை.
போலி மருந்து சாப்பிட்டாலும் செத்துடுவீங்க நண்பா
ReplyDeleteபோலி மருந்து சாப்பிட்டாலும் செத்துடுவீங்க நண்பா
ReplyDeleteம்ம்ம் ... முரண் முரண்படாமல்...
ReplyDeleteகுமரி,
ReplyDeleteஹா..ஹா..
Very Good
ReplyDeleteVery Good.
ReplyDelete/****குமரிக்கு அந்தப்பக்கம்தான் கொல்கிறார்கள்
ReplyDeleteதிரும்பி நின்றுக்கொண்டார்
திருவள்ளுவர்*******/
கலக்கல்...
நன்றி ஜெயந்தி
ReplyDeleteநன்றி கலாநேசன் :)
நன்றி செந்தில்குமார்
நன்றி பா.ரா
நன்றி கிருஷ்ணசாமி
நன்றி சரவண வடிவேல்
விநாயக முருகன்
ReplyDeleteஅருமையான் முரண் , திரும்பி நின்ற திருவள்ளுவரும், போலி மருந்து தற்கொலை முயற்சியும் ரசிக்கும்படி இருந்தது
நன்றி ஜேகே