Friday, January 10, 2014

கிழட்டுப்புலி

தங்கள் நகங்கள் மழுங்கி போனதையும்
தங்கள் நடை தளர்ந்து போனதையும்
தங்கள் பற்கள் உதிர்ந்து போனதையும்
தங்கள் பார்வை மங்கி போனதையும்
தங்கள் உடல் திராணியற்று போனதையும்
தங்கள் குரல் பலவீனமாக போனதையும் 
தங்கள் இரை கைகெட்டும் தூரத்தில் இருப்பதையும்
உணரும் தருணத்தில்
பதுங்கும் முடிவை கைவிடுகின்றன
கிழட்டுப்புலிகள்





நன்றி
விநாயக முருகன்

No comments:

Post a Comment