Friday, July 1, 2011

இரண்டு கவிதைகள்

இயல்பு
-------
கேசவப் பெருமாள் கோவிலில்
ராமகாதை சொல்லிக் கொண்டிருந்தார்
பத்து அவதாரமெடுத்தவர் கதையை
பட்டாச்சாரியார் பாடிக்கொண்டிருந்தார்
கேட்க கேட்க கண்ணீர் மல்கியது

கதையின் கிளைமாக்சில்
ராமன் தனது பாதுகைகளை
பரதனிடம் ஒப்படைக்க
கோவில் வாசலில் கழற்றிப்போட்ட
புதுச்செருப்பு ‌மீது
பார்வை செ‌ன்றது


புகழ்
----
மார்க்கெட் போன
நடிகர் ஒருவரை
துணிக்கடை திறப்பு விழாவில்
சந்திக்க நேரிட்டது
சிரித்தபடி கைகுலுக்கியவரிடம்
ஆட்டோகிராப் நோட்டை தந்தேன்

விழுந்தால் விதையாவேன்
எழுந்தால் மரமாவேன்
அன்புடன்………எ‌ன்று முடிந்திருந்தது
அழகான கையெழுத்து

பாவம்
எங்கு விழுந்து எழுந்தாரோ

.