Wednesday, June 29, 2011

ஆரண்யகாண்டம்-ஒரு கலந்துரையாடல்



ஆரண்ய காண்டம் தமிழின் மிக புதுமையான முயற்சி. இந்தப்படம் பற்றி இன்னும் விரிவான விவாதங்களும்,பரவலான கவன ஈர்ப்பும் தமிழ்ச்சூழலில் நிகழ்த்தப்பட வேண்டும். இதன் தொடக்கமாக நானும், நண்பர் விஜயமகேந்திரனும் இணைந்து ஆரண்யகாண்டம் திரைப்படம் பற்றிய ஒரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதில் ஆரண்யகாண்டம் திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கலந்துக் கொள்கிறார். கருத்துரை வழங்குபவர்கள் அரவிந்தன் (காலச்சுவடு), கவிதா முரளிதரன் மற்றும் வெளிரங்கராஜன்.

இட‌ம்:- டிஸ்கவரி புக் பேலஸ் (பாண்டிச்சேரி ஹெஸ்ட் ஹவுஸ்அருகில்)
மேற்கு கே.கே.நகர்,சென்னை-78

நாள்:- ஜூலை 2 , சனிக்கிழமை

நேரம்:- மாலை 6 மணி

நண்பர்கள் அனைவருக்கும் தனித்தனியாக அழைப்பு அனுப்ப இயலவில்லை. இந்த அறிவிப்பை அழைப்பாக ஏற்றுக்கொண்டு அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கின்றேன்.

நன்றி !!!

தொடர்புகளுக்கு:-
விநாயக முருகன் 9841790218
விஜயமகேந்திரன் 9444658131
வேடியப்பன் 9940446650

.