Saturday, May 30, 2009

"வித்தை" மற்றும் "என் கடல்வெளி நினைவுகள்" - உயிரோசை கவிதை

நான் மிகவும் நேசிக்கும் கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஆசிரியராக இருக்கும் உயிரோசை இதழில் வெளியான எனது "வித்தை" மற்றும் "என் கடல்வெளி நினைவுகள்" கவிதையை வாசிக்க...

வித்தை
அவன் ஒரு கழைக்கூத்தாடி
ஆறடி உயரம்.
பதினைந்த‌ங்குல விட்டத்தில்
குறுக்கி நுழைகிறான்.
அறுபதடி அந்தரத்தில்
அந்தப் பக்கமும்
இந்தப் பக்கமுமாய்…
ஏழங்குல கத்தி
உண்டு செரிக்கின்றான்
கண்கட்டி வீசுகிறான்
கழுத்துக்கு ஓரங்குலம் மட்டுமே.

அதைவிட அதிசயமாய்…..….….
......
......
ஐம்பது காசுகளில்
ஒரு நாள்
உயிர் தப்பும் வித்தை.

என் கடல்வெளி நினைவுகள்
இளஞ்சூடாய் கைகளில்
இறங்கின.
அப்பா சொன்ன கதைகள்.
ஆறெங்கும் அ‌ஸ்தியாய்
வழிந்தோடின
அப்பா சொன்ன கதைகள்.

பெருநகர காலலைகளில்
அலைபாயும் ஆசைகளாய்.
இப்போதும் தட்டுப்படுமா
அப்பா சொன்ன கதைகள்
எ‌ன்று…
அதிகபட்ச ஆசையாய்…
அப்பாவே கிடைப்பாரென.



நன்றி...!

-என்.விநாயக முருகன்

No comments:

Post a Comment