Sunday, May 1, 2011

தேன்மொழி - வல்லினம் கவிதை

வல்லினம் இதழில் வெளியான தேன்மொழி எ‌ன்ற கவிதையை இங்கு பகிர விரும்புகின்றேன்..வல்லினம் இணையத்தளத்திற்கு நன்றி!


அழைப்பிசை

ஏதொவொரு கோடை விடுமுறையில்
மொட்டை மாடி தாழ்வாரத்தில்
குடிவந்தது அந்த சிட்டுக் குருவி

குருவிக்கூட்டை கலைப்பது மகாபாவம்
கண்டிப்புடன் சொன்னாள் பாட்டி

உனக்கென்ன போச்சு
எனக்குதானே தலைவலி
சிதறிக்கிடக்கும் வைக்கோல் குச்சிகளை
அடிக்கடி பெருக்கியபடி
அலுத்துக் கொண்டாள் அம்மா

தாய்க்குருவி இல்லாத நேரம்
முட்டைகளை எடுத்து
அடிக்கடி ரசிப்பது
தங்கையின் வழக்கம்

இரைதேடி இர‌வி‌‌ல் அலையும்
கடுவன் பூனைகளிடமிருந்து
குஞ்சுகளை காப்பதிலேயே
பொழுது போனது பாட்டிக்கு

குஞ்சுப் பறவைகள்
பறந்து செல்ல
மாடிப் புழக்கம்
வெகுவாக குறைந்துப்போன நாளொன்றில்
மொட்டை மாடிக்கு
குடிவந்தது அந்த செல்போன் கோபுரம்

மீண்டுமொரு கோடை விடுமுறையின்
மதிய உறக்கப் பொழுதில்
திடுக்கிட்டு கண்விழித்தோம் அனைவரும்

இனம் புரியாத சோகத்தில்
தங்கையின் அலைப்பேசி
கீச் கீச்சென்று அழைப்பிசையில்
கதறிக் கொண்டிருந்தது

நன்றி
என். விநாயக முருகன்

3 comments:

  1. வெளியை சூடாக்கி
    குளிர்காற்றை கதவடைத்து
    காக்கிறோம் :(

    ReplyDelete
  2. நன்றி ராமலக்ஷ்மி
    நன்றி அசோக்

    ReplyDelete