Friday, January 10, 2014

உண்மை

திருட்டு விசிடியில்
சரஸ்வதி சபதம் பார்த்த
ஊமை வித்யாபதிக்கு
திடீரென பேச்சு வந்தது


ம்..ம்மா... ம்..ம்மா
அம்மா...அப்பா
அம்மா...அப்பா
அம்மா...அப்பா
ஓசை ஒலி சப்தம் நாதம்
எழுத்து சொல் பொருள்
இசை பண் பாட்டு கவி கவிதை செய்யுள்
அறம் பொருள் இன்பம்
அன்னை தந்தை தெய்வம் ஆசான்
பேச்சு மொழி
பேசும் தன்மை அனைத்தும் வந்துவிட்டது
தாயே என்றவன்
திருட்டு விசிடியை மூலக்கடையில் வாங்கிய
உண்மையையும் உளறி வைத்தான்


நன்றி
விநாயக முருகன்

No comments:

Post a Comment