Friday, April 23, 2010

கொசுத்தொல்ல தாங்கமுடியலடா நாராயணா

கிழவிக்கு வைத்தியம் பார்க்க
விசா இல்லையாம்
ஐ.பி.எல்லுக்கு வந்திறங்கும்
வெளிநாட்டு குஜிலிகள்

ஒரு ரூபாய் அரிசி
வாக்கரிசிக்கும் லாயக்கில்லை
பொணம் கூட வாயைமூடுது

அதிகம் யோசிக்காதே
இருக்கவே இருக்கு
இலவச டிவி

நொடிக்கொரு பவர்கட்
கதவைத்திற காற்று வரட்டும்
சாமி கூட வெயிலில் வாடுது
சாமியாருக்கு ஏ.சி.கார்

ஆபரேஷன் கிரீன்ஹண்ட்டில்
ஆதிவாசிகளை கொன்று குவிப்போம்
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்

எவன் செத்தா எனக்கென்ன?
என் வைப்பாட்டிக்கு பரிசு
கிரிக்கெட் டீம்.

13 comments:

  1. நச்!
    கப் சிப்
    மூச்சு விடமாட்டோம்

    ReplyDelete
  2. சூப்பர். நிறைய எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இதுதான் நண்பரே அருமையான வரிகள்
    //ஆபரேஷன் கிரீன்ஹண்ட்டில்
    ஆதிவாசிகளை கொன்று குவிப்போம்
    ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்//

    அடுத்த பொய்தவம் எப்போ?

    ReplyDelete
  4. கோவில் மிருகம் வாசிச்சுட்டு இருக்கேன். நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. ஒரு ரூபாய் அரிசி செம்ம ஹிட்டுப்பா.... ஊரெல்லாம்..


    மத்ததெல்லாம் செம்ம ஹாட்டு...

    ReplyDelete
  6. கலக்கல். படிக்க வேண்டியவங்க படிப்பாங்களா?

    ReplyDelete
  7. உண்மையைப் பிரதிபலிக்கும் வரிகள்

    ReplyDelete
  8. இது தப்பாட்டங்கோவ்... நிஜமாவே மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

    நான் எழுதின “யோனி, முலை மற்றும் சில கவிதைகள்” கவிதையை அப்படியே எடுத்திருக்கீங்க.....

    //சூப்பர். நிறைய எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்//

    ஃபோரம்ல டீஸன்சி பத்தி வகுப்பெடுத்த சிவப்ரியன் சார்... இந்த மாதிரி பண்றதும் அதுக்கு வாய்மூடி மௌனியா சப்போர்ட் பண்றதும் எந்த வகையில சேர்த்திங்க?

    விநாயகமுருகன்... courtesy விந்தைமனிதன்னாவது போட்டிருக்கலாமே! தோணலீங்களா?

    ReplyDelete
  9. இப்படியெல்லாம் எழுதுனீங்கனா உங்க வீட்டுக்கும் கலர் டிவி குடுத்துருவாங்க :-)

    ReplyDelete
  10. நன்றி யாழ்
    நன்றி சிவப்ரியன்
    நன்றி மயில்ராவணன்
    நன்றி ரமேஷ்
    நன்றி சரவணக்குமார்
    நன்றி அசோக்
    நன்றி அஹோரி
    நன்றி விந்தைமனிதன்
    நன்றி உழவன்

    ReplyDelete