Saturday, August 14, 2010

அ கவிதை அல்லது A கவிதை

அ கவிதை அல்லது A கவிதை

ச்சீய்
------
பத்தாம் வகுப்புத் தோழன்
சங்கரநாராயணன் ஞானப்பழம்
என்ன சொன்னா‌‌‌லும் வெட்கப்படுவான்
ச்சீய் எ‌ன்பான்


மச்சி அந்த ஃபிகர பார்த்தியா?
ச்சீய்
ஜோதில பிட்டு படம் போகலாமா?
ச்சீய்
கொழந்தை எப்படி பொறக்குது தெரியுமா?
ச்சீய்
இந்த புத்தகம் பார்த்தியா? ஆயில் பிரிண்ட்...
ச்சீய்
ஹனிமூன் எங்கடா போவே?
ச்சீய்
கல்யாணம் ஆனா‌‌‌ல் என்னடா செய்வ?
ச்சீய்...ச்சீய்


பத்தாண்டுகளுக்கு பிறகு
சங்கரநாராயணனை
சத்திரம் பேருந்து நிலையத்தில் பார்த்தேன்


என்னடா செய்யுறே?
ஆசிரமத்தில சேர்ந்துட்டேண்டா
ச்சீய்


நன்றி
-என்.விநாயக முருகன்

11 comments:

  1. சரிதான் நண்பரே..

    ReplyDelete
  2. நல்லா இருக்குது விநாயகமுருகன்

    நன்றி ஜேகே

    ReplyDelete
  3. நன்றி கார்த்திகைப் பாண்டியன்
    நன்றி மதன்
    நன்றி கமலேஷ்
    நன்றி மாதவராஜ்
    நன்றி ஆடுமாடு
    நன்றி சின்னப்பயல்
    நன்றி இராமசாமி கண்ணண்
    நன்றி உழவன்
    நன்றி ஜேகே

    ReplyDelete
  4. superb kavithai...
    http://aadaillathavarigal.blogspot.com/

    ReplyDelete