Wednesday, June 8, 2011

கருத்து கந்தசாமி

கருத்து கந்தசாமி
எல்லாத்துக்கும் கருத்து சொல்வார்

சமச்சீர் கல்வியெல்லாம்
சரிப்பட்டு வராதுங்க
சர்வேதச தரத்துக்கு
சரியான தீர்வு மெட்ரிக் படிப்புதான்
என்ன நான் சொல்லுறது
என்னிடம் கேட்பார்
நான் என்ன சொல்லுறது
முனிசிபாலிட்டி பள்ளிக்கே
முக்கி முக்கி செ‌ன்றவன்

தினந்தந்தியை கூட
எழுத்துக்கூட்ட தெரியாது
எனக்கு
என்னிடம் சொல்வார்
தமிழ்ல எழுதறவன் எல்லாம்
முட்டாப் பயலுங்க தம்பி
மலையாளத்துல பாருங்க
மணி மணியா கவிதை எழுதறாங்க

அருந்ததிராய் ஒரு நக்சலைட்டுங்க
அவரையெல்லாம் என்கவுண்டர் செய்யனும்
ஐஸ்வர்யாராய் கூட அழகாயிருக்கா
எனக்கு சிரிப்பு வரும்

பெரியாரெல்லாம் வேஸ்ட்டுங்க
வைக்கம் எங்க இருக்குனு
தெரியுமா அவருக்கு
கோபத்துடன் சொல்வார்
கேட்கலாமென்றால்
எங்கு போய் தேடுவது பெரியாரை

பசுவதை தடை சட்டம்
கொண்டு வரனுமுங்க
பசுக்களெல்லாம்
தெய்வம் உறையும் இடம்
தெரிஞ்சுதோ
கோமாதா லட்சுமி கடாட்சம்
ஒண்ணுமே வெளங்காது எனக்கு
தேமேவென்று வாயை பார்ப்பேன்

க்யூபாவுல பிடல் காஸ்ட்ரோ
செய்யுறது அநியாயம்ங்க
நம்ம ஊருக்கு கம்யூனிசமெல்லாம்
சரிப்பட்டு வராது..
சரிதானே கேட்பார்
அது சரி
எந்த இசத்தை நான் கண்டேன்

எல்லாத்துக்கும் கருத்து சொல்லும்
கந்தசாமி
ஒரு நாள் இறந்துவிட்டார்
கல்லறைக்கு போயிருந்தேன்

அன்று வாயே திறக்கவில்லை
அஞ்சலி செலுத்திவிட்டு
அமைதியாக நின்றிருக்க
என்னிடம் சொன்னார்

நடுகல் இடுவது
பழங்குடி மரபு
இதிகாசங்களில்
இதுபற்றி ஏராளமாய்
தொன்மம் இருக்கிறது
தென்ஆப்பிரிக்கா நாட்டு
இடுகாடுகளில் கூட
இதற்கு சான்றுகள் உள்ளன

நான் பதிலேதும் சொல்லவில்லை
முன்ன பின்ன செத்திருந்தா
சுடுகாடு தெரிந்திருக்கும்
வருத்தமாயிருந்தது எனக்கு




.

5 comments:

  1. கருத்துக்கள் மிக அதிகம்..... முயற்சிக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. nalla irukku...yaaru andha karuththu kandhasaamy?

    ReplyDelete
  3. eppadi ungalaalei mattum ippadi kavithai elutha mudiyuthu. super thalaiva.

    ReplyDelete