Monday, July 6, 2009

"எங்கே அவன்?" மற்றும் "தேடல்" - நவீனவிருட்சம் கவிதை

நவீன விருட்சம் இதழில் வெளியான எனது "எங்கே அவன்?" மற்றும் "தேடல்" கவிதைகளை வாசிக்க...

எங்கே அவன்?
நானே காலமுமாய் இருப்பதாய்
சொன்னவன்
கடந்து விட்டானா?
கரைந்து கொண்டிருக்கிறானா?
சொல் இருக்கிறது.
சொன்னவன் எங்கே?
கேட்டவன் எவன்?

தேடல்
எத்தனை முறை உதிர்ந்தாலும்
அத்தனை முறையும்
பூத்துத்தொலைக்கும்
காதலை எழுதிய
இறகொன்றும்

எத்தனை முறை பெய்தாலும்
அத்தனை முறையும்
கொட்டித்தீர்க்கும்
மழையில் நனைந்த இறகொன்றும்

நூறாண்டுகளாய்
அலைந்துக்கொண்டிருக்கும்
சிறகிலிருந்து பிரிந்த
இறகொன்றும்

தேடிக்கொண்டிருக்கின்றன.

தீராத பக்கங்களில்
எந்த கூட்டில்
அமர்ந்துள்ளது அதுவென்று.

நன்றி
-என். விநாயக முருகன்

No comments:

Post a Comment