Friday, July 17, 2009

"ஒரு வேண்டுகோள்" - நவீன விருட்சம் கவிதை

நவீன விருட்சம் இதழில் வெளியான எனது "ஒரு வேண்டுகோள்" கவிதை வாசிக்க...

ஒரு வேண்டுகோள்

ஒரே கயிற்றில்
ஒரு டஜன்
கோழிகளையாவது
கால்களில் சுருக்கிட்டு
சைக்கிளின் இருபுறம்
தொங்கவிட்டு செல்கிறான்
நிதானமாக.
மானசீகமாக வேண்டுகிறேன்.
கொஞ்சம்
விரைந்துச்செல்
நண்பா
சீக்கிரம்...
வெந்நீரில் முக்கியோ
கழுத்து திருகியோ
கொன்றுவிடு.

நன்றி

-என்.விநாயக முருகன்

2 comments: