Saturday, July 25, 2009

சுவாரசிய பதிவுகள் விருது

சுவாரசிய பதிவுகள் விருது



குறைந்த சொற்களில் நிறைய விஷயம் புரிய வைப்பதைப் போல கடினமான வேலையெதுவுமில்லை. உலகின் ஆகச்சிறந்த தத்துவங்கள் எல்லாம் நாலு வரிகளில் சொல்லப்பட்டவையே.

நாவல் எழுதுவது கஷ்டம். சிறுகதை எழுதுவது இன்னும் கஷ்டம். கவிதை எழுதுவது அதைவிட கஷ்டம். மவுனமாக இருப்பது எல்லாவற்றிலும் கஷ்டம்.

மவுன நிலையை ‌விட அடு‌த்த யோக நிலையில் இருக்கும் கவிதை களனைத் தேர்வு செய்து எழுதும் கவிஞர்களுக்கு ‌விருது வழங்குகிறேன்.

அனுஜன்யா
அகநாழிகை
கார்த்தி.என்
மண்குதிரை
செல்வராஜ் ஜகதீசன்
பா.ராஜாராம்
ச.முத்துவேல்
ஹரன் பிரசன்னா

இன்னும் நிறைய கவிஞர்கள் உள்ளனர். நான் வலைப்பூவிற்கு புதியவன். அவ்வளவாக பல கவிஞர்களை எனக்கு தெரியாது. கவிதை எழுதும் அனைவருக்கும் விருதுகளை வழங்குகிறேன்.

9 comments:

  1. நான் படித்த மற்றும் பிடித்த அத்தனை பேரும் இவ்வரிசையில்..
    உங்களின் அளவு கடந்த அன்பிற்கும் நன்றி என்ற ஒற்றைச் சொல்லையே இக்கணம் இங்கே விட்டுப் போக முடிகிறது!!

    ReplyDelete
  2. தங்களின் அன்புக்கும், விருதுக்கும் மிக்க நன்றி கவிஞரே. நெகிழ்ச்சியாய் உணர்கிறேன்.

    ReplyDelete
  3. அன்பிற்கு நன்றி நண்பா,

    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  4. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பரே.

    மண்குதிரை.

    ReplyDelete
  5. நீங்க தான் வாழும் வள்ளல்
    ஆறு பேர்துக்கு கொடுக்க சொன்னா எட்டு பேருக்கு வாரி வழங்கிட்டிங்க!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. கவிதை எழுதும் அனைவருக்கும் விருதுகளை வழங்குகிறேன். :)

    ReplyDelete
  7. நண்பர்கள் அனைவருக்கும வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. மிகுந்த நன்றியும் அன்பும் விநாயகம்,

    ReplyDelete