Friday, October 23, 2009

வாழ்த்துரை

வாழ்த்துரை
——----——–
மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல
மேடயேறிய தலைவர்
மெல்ல செருமியபடியே ஆரம்பித்தார்.
எதிர்கட்சியை வசைபாடியவர்
ஒ‌ன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்
எ‌ன்று நிறுத்தினா‌‌‌ர். நீண்ட பேச்சினூடே
மக்களுக்கு ஒ‌ன்று சொல்கிறேனென்று
வேறொன்றை சொன்னார்.
தொடர்ந்து பேசியவர்
இளைஞர்களுக்கு ஒ‌ன்று சொல்கிறேன்
சமுதாயத்துக்கு ஒ‌ன்று சொல்கிறேன்
பத்திரிகையாளர்களுக்கு ஒ‌ன்று
எ‌ன்று நீட்டிக்கொண்டே சென்றார்.
மணமக்களுக்கென்று எதுவும்
சொல்லாமலேயே கிளம்பினார்.
அந்தவொன்று என்னவெ‌ன்றும்
இறுதிவரை சொல்லவில்லை.

3 comments:

  1. //அந்தவொன்று என்னவெ‌ன்றும்
    இறுதிவரை சொல்லவில்லை.//

    அன்றாட நிகழ்வுகளின் அருமையான பதிவு!

    ReplyDelete
  2. நானா இருந்தா கல்யாணத்துக்கு போனோமா கவர் கொடுத்தோமா சாப்டோமான்னு கிளம்பி இருப்பேன்...உங்க பொறுமைக்கு ஒரு அளவே இல்லையா!!!???!!!

    ReplyDelete
  3. நன்றி கேயார்
    :) நன்றி ரவி

    ReplyDelete