Tuesday, October 27, 2009

இறைத்தூதுவன்

இறைத்தூதுவன்
——————————————
இரண்டு மாடிக்கடையில்
விற்பனை பிரதிநிதியென்று
அறிமுகப்படுத்திக் கொண்டவன்
இந்த புதுசெல்போனில்
பிரியமானவர்களின்
மனதின் குரலோடு
ரகசியமாக பேசலாமென்றான்.
பதிலேதும் சொல்லாமல்
புன்னகையோடு பார்த்தேன்.
என் மீது நம்பிக்கை வரவில்லை போலும்.
வரிசையாக சொல்ல ஆரம்பித்தான்.
பாட்டு கேட்கலாம்.
படம் பார்க்கலாம்.
படம் பிடிக்கலாம்.
குறிப்பெழுதலாம்.
கடிகாரம் உண்டு.
காலண்டர் பார்க்கலாம்.
விளையாடலாம்.
புத்தகம் படிக்கலாம்.
ஓவியம் வரையலாம்.
கணக்குகள் செய்யலாம்.
கடவுளையும் வரவழைக்கலாம்…….
திகைத்துப்போய் நிமிர்ந்தேன்.
அவன் தலைக்கு பின்னால்
சிறு ஒளி வட்டம் இருந்தது.

6 comments:

  1. மெய்யாளுமே கட்சி ரெண்டு வரி பிரிலபா.. தலைப்பும்

    ReplyDelete
  2. ரசித்தேன் மிக ரசித்தேன்

    ReplyDelete
  3. அருமையான கவிதை விநாயகம்! :-))

    ReplyDelete
  4. Vinay...idhu konchm over...
    Irundhaalum miga nandru.

    ReplyDelete
  5. நன்றி அசோக் (கலிகாலத்தில் செல்போன் கடவுள். அதை விற்பவன் இறைத்தூதுவன்)

    நன்றி நேசமித்ரன்
    நன்றி ராஜாராம்
    நன்றி மண்குதிரை
    நன்றி ரவி

    ReplyDelete