Saturday, August 8, 2009

"கோவில் மிருகம்" மற்றும் "இரண்டு கவிதைகள்" - நவீன விருட்சம்

சமீபத்தில் நவீன விருட்சத்துக்கு அனுப்பிய எனது "கோவில் மிருகம்" மற்றும் "இரண்டு கவிதை" களை இங்கு பகிர்கிறேன்

கோவில் மிருகம்
-------------------
என்னதான் அடித்தாலும்
அ‌ங்குசத்தால் காதில்
குத்தினாலும்
வாலை முறுக்கி
வலியேற்றினாலும்
வற்புறுத்தி பிச்சையெடுக்க
வைத்தாலும்
கா‌ட்டு‌ப்பாகனொருவன்
நம்பி உறங்குவது
கோவில் மிருகத்தின்
காலடி நிழலில்

ஒழுங்கு
--------
வரிசையாக ஆடுகின்றன
பிரசவ ஆஸ்பத்திரி
தொட்டில்கள்
வரிசை வரிசையாக
பார்த்து சிரிக்கிறார்கள்
பார்வையாளர்கள்
வரிசை தவறாமல் பெற்று
வரிசையில் சேர்த்து
உச்சி முகர்கிறார்கள்
தகப்பன்கள்
வரிசையாக நின்றும்
வரிசையில் தின்றும்
வரிசையில் படுத்தும்
வரிசையாகவே செத்தும் போகிறார்கள்

ஒரு மழை இரவின்
-------------------------
ஒரு மழை இரவின்
திடீரென இறங்கிய
இடிச்சத்தத்தில்
அர்ச்சுனாவென்று அலறி
கட்டிப்பிடித்தாய் என்னை
கீதாஉபதேசம் பெற்றேன்

-நன்றி
என். விநாயக முருகன்

2 comments: