Tuesday, August 11, 2009

"இரண்டு கவிதைகள்" - நவீன விருட்சம்

சமீபத்தில் நவீன விருட்சத்துக்கு அனுப்பிய எனது "இரவெல்லாம்" மற்றும் "சட்டையொன்று" கவிதைகளை இங்கு பகிர்கிறேன்

இரவெல்லாம்
----------------------
இரவெல்லாம் கத்தியபடி
வழியெங்கும்
வயிறு வெடித்து
கிடந்த தவளைகள்
நினைவூட்டுகின்றன
முன்தின மாலையின்
நமக்கான பிரிவொன்றை


சட்டையொன்று
----------------------
என்னை
தன்னுள்ளே உடுத்தியபடி
சட்டையொன்று கிளம்பியது.
எதிர்வந்தவர்கள்
நலம் விசாரிக்க
என்னை இறுதிவரை
பேசவிடாமல்
தன்னைப் பற்றியே
பெருமையடித்து தீர்த்தது.
புறக்கணிப்பின் உச்சத்தில்
ஒரு நாள்
சட்டைக்குள்ளிருந்த
நானொன்று
அம்மணமாக வெளியேறியது
யாரிடமும் சொல்லாமல்

- நன்றி
என். விநாயக முருகன்

6 comments:

  1. பிரமிப்பு ஏற்படுத்துகிறீர்கள் விநாயகம்.நன்றி,தொடக்க பள்ளிக்கான கவிதைக்கு.அன்பு,இங்கிருக்கிற இரண்டு கவிதைகளுக்கும்,உங்களுக்கும்.

    ReplyDelete
  2. அற்புதம் இரண்டு கவிதைகளுமே
    நண்பரே
    நவீன விருட்சத்தில் வாசித்தேன்

    ReplyDelete
  3. //இரவெல்லாம் கத்தியபடி
    வழியெங்கும்
    வயிறு வெடித்து
    கிடந்த தவளைகள்
    நினைவூட்டுகின்றன
    முன்தின மாலையின்
    நமக்கான பிரிவொன்றை//

    கவிஞன் வார்த்தைகளின் காதலனாக இருக்க வேண்டும் என்று மலேசிய மூத்த எழுத்தாளர் சண்முகசிவா அடிக்கடி சொல்வார். உங்களின் வார்த்தைகள் உங்களுக்குப் பிடிக் கொடுத்திருக்கின்றன. வாழ்த்துகள்

    ReplyDelete