Wednesday, August 26, 2009

"தனிமை" - நவீன விருட்சம் கவிதை

நவீன விருட்சத்தில் வெளியான ஒரு கவிதை.


தனிமை
---------
நூறாண்டுக்கு முந்தைய
பாழடைந்த வெறுமை
படர்ந்த கோயில்களுக்கு
தனியாக செ‌ன்று
திரும்பும்போதெல்லாம்
முதுகுக்கு பிறகு
சன்னமாக கேட்கிறது
விசும்பலொலி
அடு‌த்த முறையாவது
உன்னிப்பாகப் பார்க்க வேண்டும்

-நன்றி
என்.விநாயக முருகன்

8 comments: