Monday, November 30, 2009

பிடித்த 10 பிடிக்காத 10

பிடித்த 10 பிடிக்காத 10

நண்பர் அசோக் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்.

இன்னைக்கு பிடிக்கறவங்க நாளைக்கு பிடிக்காமல் போகலாம். இன்னைக்கு பிடிக்காதவங்களை நாளைக்கு பிடித்து போகலாம். மாறுவது மனம் எ‌ன்ற சப்டைட்டிலுடன் செல்வதால் இங்கு பிடிக்காதவர் பட்டியலில் வரும் நண்பர்கள் கோவிச்சுக்க வேண்டாம்

1.நடிகை

பிடித்தவர் : வேற யாரு? நமீதா :)

பிடிக்காதவர்: வேற யாரு? அம்மா வேஷத்துல நடிக்கற நடிகைகள் அனைவரும்


2.அரசியல்வாதி

பிடித்தவர் : தமிழருவி மணியன் (யாருப்பா இவரு? நீங்கள் கேட்பது காதில் விழுகின்றது)
வை.கோ (அய்யோ பாவம்)

பிடிக்காதவர்: அனைவரும்

3. உணவு

பிடித்தவை : நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே நீங்கள் எல்லாம் (உடும்புக்கறி
சாப்பிட்டிருக்கீங்களா? சூப்பரா இருக்கும் )

பிடிக்காதவை: ரசம்

4. இயக்குனர் :

பிடித்தவர் : முன்னாள் பாரதிராஜா
பிடிக்காதவர் : இன்னாள் பாரதிராஜா , பாலசந்தர், ராம நாராயணன்

5. எழுத்தாளர்

பிடித்தவர் : தி.ஜா, தஞ்சை ப்ரகாஷ்,கரிச்சான்குஞ்சு, சாரு,இ.பா(ஊர் பாசம்)
பிடிக்காதவர் : இன்னாள் பாலகுமாரன்

6. இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா, எ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ்,எம்.எஸ்.வி,டி.எஸ்.பி
பிடிக்காதவர் : ம்ம்.. யோசிக்கனும்

7. கவிஞர்கள்

பிடித்தவர் : பாரதி,தேவதச்சன்,நகுலன்,கல்யாண்ஜி,முன்னாள் மனுஷ்ய புத்திரன்,
ஞானக் கூத்தன் ,முகுந்த் நாகராஜன்

பிடிக்காதவர் : பிடிக்காதவர் எ‌ன்று சொல்ல முடியாது, மனதை அவ்வளவாக
பாதிக்காதவர் வைரமுத்து

8. ஊர்கள்

பிடித்தது : கும்பகோணம் (பிறந்தது), சென்னை (வாழவைப்பது)

பிடிக்காதது: புதுக்கோட்டை (சரியான தூங்குமூஞ்சி ஊர்)

9. பதிவர்


பிடித்தவர் : என்.விநாயக முருகன்
(இந்த மூஞ்சிக்கே இந்த மூஞ்சிய பிடிக்கலனா‌‌‌ வேற எந்த மூஞ்சிக்கு நம்மள பிடிக்கும்)

பிடிக்காதவர்: அனானிமஸ் பெயரில் பின்னூட்டம்,இடுகை எழுதுபவர்கள்.(ராஸ்கல்ல்ஸ்ஸ்)

10. காமெடியன்

பிடித்தவர் : கவுண்டமணி, வடிவேலு, விவேக், என்.எஸ்.கே

பிடிக்காதவர் : சோ, தங்கபாலு, சு.சுவாமி

நாலு பேரை கூப்பிடனும்..

1. கதிரவன்

2. மண்குதிரை

3. சி.கருணாகரசு

4. நந்தா

5. அனுஜன்யா

6 comments:

  1. நல்ல ரசனை வினாயக் முருகன் நமீதா தவிர

    :)

    ReplyDelete
  2. வித்தியாசமான ரசனை.. அவரவர் டேஸ்ட் எவ்வளவு மாறுபடும்ன்னு புரியுது நண்பா..

    ReplyDelete
  3. மண்குதிரையை ஜப்பான்லயிருந்து ஜாக்கிச்சான் கூப்பிட்டார், அப்புறம் நான் கூப்பிட்டேன் இப்ப நீங்களுமா...

    நிற்பதுவே..நடப்பதுவே..பறப்பதுவே..(இங்கதான் கவிஞன் நிக்கறான்).. நிறைய ரசனை ஒத்துபோவது ஆச்சரியமே!

    வண்ணத்துபூச்சியாரே... எனக்கு ஒரு கமெண்டு போட்டதில்ல.. இங்க விநாயக் மட்டும்.. ம்ம் நல்லாயிருங்க.

    ReplyDelete
  4. இன்னாள் என்பது சரியல்ல...இந்நாள் என்பதே சரி!

    நமீதா-வை விடலேன்னு தெரியும்போதே நீங்கள் 'விடலை'ன்னு தெரியுது!


    -இன்றைய கவிதை அன்பர்கள்

    ReplyDelete
  5. நன்றி நண்பா முயற்சி செய்கிறேன்.

    அசோக் - -:))

    ReplyDelete
  6. நன்றி நேசமித்ரன்
    நன்றி சூர்யா
    நன்றி அசோக்
    நன்றி கேயார்
    நன்றி நண்பா

    ReplyDelete