Monday, November 9, 2009

"இரண்டாவது நாள்" - உயிரோசை கவிதை

இந்த வார உயிரோசையில் வெளிவந்த "இரண்டாவது நாள்" கவிதை வாசிக்க...

இரண்டாவது நாள்
----------------
சிவப்புநிற சிக்னலில்
கார் கதவை தட்டுகின்றாள்
பொம்மை விற்கும் சிறுமியொருத்தி.
சாப்பிட்டு இரண்டு நாள் ஆகின்றது.
கடந்த சிக்னலில் கேட்ட அதே ஓலம்.
இன்னொரு பொம்மை
வாங்கவும் ஒப்பவில்லை மனம்.
பார்வையைத் தவிர்த்து
பச்சை நிறம் நோக்கி வீசுகின்றேன்.
ஒரு பொம்மை, ஒரு சிறுமி,
ஒரு சிக்னலுக்கு ஏங்குகின்றது மனம்.
ஒரு நாள் பட்டினிக் கூட பழகியிருந்தது.


-நன்றி
என்.விநாயக முருகன்

3 comments:

  1. //பார்வையைத் தவிர்த்து
    பச்சை நிறம் நோக்கி வீசுகின்றேன்.//

    அருமை!

    -கேயார்

    ReplyDelete
  2. நன்றி கேயார்
    நன்றி மண்குதிரை
    நன்றி ஜேகே

    ReplyDelete