Friday, November 20, 2009

இரண்டு கவிதைகள்

திணைமயக்கம்
—————————————
தேநீர் கடையில் நின்றிருந்தவர்
தமிழ் ஆர்வலராம்
கோபத்தோடு கத்தினார்
கலாச்சார கண்றாவி
கசக்கி வீசினார் செய்தித்தாளை

காசிமேடு அருகே
கள்ளக்காதல் எதிரொலியாம்
கணவன் வெட்டி கொலை
மனைவி கைது
திருச்சியை சேர்ந்த
வாலிபருக்கு வலைவீச்சு
செய்தித்தாளை எட்டிப் பார்த்தேன்

அட.…திணைமயக்கம்
குறிஞ்சி நெய்தல்
பெருந்திணை எ‌ன்று
ஒரு நிமிடம் ஓடியது

5 comments:

  1. -;) நல்லா இருக்கு எவ்விஎம் ரசித்தேன்

    ReplyDelete
  2. //நாளை ஆசிரமத்துக்கு
    தர இருக்கும் அவனது
    பழைய சட்டைகளை காண்பித்தான்.
    வலதுகை பக்கம்
    லேசாக கிழிந்து இருந்தது
    கொடுத்து கொடுத்து கிழிந்திருக்கலாம் //

    -Excellent!!

    -Kayaar

    ReplyDelete
  3. ரெண்டும் ரொம்ப பிடிச்சு இருக்கு விநாயகம்.

    ReplyDelete
  4. நன்றி சுந்தர்
    நன்றி மண்குதிரை
    நன்றி அசோக்
    நன்றி கேயார்
    நன்றி ராஜாராம்

    ReplyDelete