Wednesday, November 25, 2009

எட்டாவது வார்டிலிருந்து

எட்டாவது வார்டிலிருந்து
----------------------

தேங்கிநின்ற மழைநீருக்கு
மனு கொடுக்க சென்றிருந்தேன்
எல்லாம் சரியாகிவிடுமென்றார்
அடு‌த்த இரண்டுநாட்களில்
வெயில் அடித்து காய்ந்துவிட்டது

வெயிலுக்கு நிழற்குடை நிறுத்தம்
வேண்டி சென்றிருந்தேன்
எல்லாம் சரியாகிவிடும்
சொல்லி முடிக்கவில்லை
மழை கொட்ட ஆரம்பித்தது

மழைநீரில் அறுந்துக்கிடந்த
மின்சார கம்பிக்கு சென்றிருந்தேன்
எல்லாம் சரியாகிவிடுமென்றார்
அடு‌த்த நாலுநாள் பவர்கட்

கடைசியாக சென்றபொழுதும்
காதுகொடுத்து கேட்டார்
இதுவும் கடந்துப்போகுமென்றார்
எட்டாவது வார்டின் ஜென்குரு

5 comments:

  1. என்னத்த சொல்ல?!

    அப்டியே அரசின் மெத்தனத்தை எழுத்தில் வடித்திருத்திருக்கிறீர்களே?!

    -கேயார்

    ReplyDelete
  2. நன்றி மண்குதிரை
    நன்றி ஜெனோவா
    நன்றி முத்துவேல்
    நன்றி கேயார்

    ReplyDelete