Friday, September 25, 2009

பிறப்பு - வார்ப்பு.காம்

வார்ப்பு.காமில் வெளியான எனது பிறப்பு கவிதை வாசிக்க...

பிறப்பு
------
நண்பருக்கு
குழந்தை பிறந்திருப்பதையறிந்து
வாழ்த்துச்சொல்ல கிளம்பினேன்.
பனிக்காலையில் பூத்தமலர்
போல உறங்கிக்கொண்டிருந்த
குழந்தையை கொஞ்சநேரம்
ரசித்துவிட்டு நண்பருடன்
பேசிக்கொண்டிருந்தேன்.
நல்ல ஸ்கூல்
கிடைக்கவேண்டுமென்று
கவலைப்பட்டார் என்னிடம்.

-நன்றி
என்.விநாயக முருகன்

8 comments:

  1. மீண்டும் மீண்டும் என்னைக் கவரும் கவிதைகளை நீங்கள் எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள் ... தொடருங்கள் ... வாழ்துகள்

    ReplyDelete
  2. hahahaha...

    இதுதான் நிதர்ஸன கவிதையோ?

    ReplyDelete
  3. 7 வயசு வரைக்கும் குழந்தைகள் numbers தெரிஞ்சுக்க கூடாதாம்.

    ReplyDelete
  4. விநாயகம் brand!உங்களுக்கான முகம் ஒன்னு எனக்குள் இருக்கு விநாயகம்.கோட்டோவியமாய்.கிட்டத்தட்ட ஸ்மைலி மாதிரி.இப்போதைக்கு உங்களை புகைப்படத்தில் பார்த்துரக்கூடாது...எங்கும்!

    ReplyDelete
  5. பார்ப்பதற்கு ஒண்ணுமே இல்லாதது போல் தோன்றும் இந்த கவிதை எழுப்பும் அதிர்வுகள் அதிகம்
    நன்றி விநாயகம்

    ReplyDelete
  6. நல்லா இருக்கு விநாயக முருகன்!

    ReplyDelete
  7. நன்றி நந்தா
    நன்றி அசோக்
    நன்றி ராஜாராம் :)
    நன்றி பாலா
    நன்றி சுந்தர்
    நன்றி நண்பா

    ReplyDelete