Saturday, September 19, 2009

"கேள்விகள்" - சொல்வனம் கவிதை

இந்த வார சொல்வனம் மின்னிதழில் வெளியான "கேள்விகள்" கவிதை வாசிக்க...
கவிதை வெளியிட்ட சொல்வனம் ஆசிரியர் குழுவினற்கு எனது நன்றி...

கேள்விகள்
----------
நண்பனொருவனை
நீண்ட நாட்கள் பிறகு
சந்திக்க நேரிட்டது.
எப்ப கல்யாணம்?
எங்க கல்யாணம் நடந்துச்சு?
காதல் திருமணமா?
ஏன்டா பத்திரிக்கை அனுப்பல?
பொண்ணு எந்த ஊரு?
வேலைக்கு போறாங்களா?
எத்தன புள்ளங்க?
பல கேள்விகள்,
பல பதில்கள்,
பல விசாரிப்புகள்.
இனி
கேட்பதற்கு எந்த
கேள்விகளும் இல்லாமல்
சந்தோசமாக உணர்ந்து
விடைபெறுகையில்
விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக
தயங்கியபடியே சொன்னான்.


-நன்றி
என்.விநாயகமுருகன்

3 comments:

  1. //சந்தோசமாக உணர்ந்து
    விடைபெறுகையில்
    விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக
    தயங்கியபடியே சொன்னான்//

    இதானப்பா உண்மை... நண்பர் தைரியசாலியாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. நன்றி பாலா
    நன்றி அசோக்

    ReplyDelete